Tamilnadu
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் தொகுயிலேயே பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் என்ற இளைஞர இன்று காலை பெரம்பூர் பள்ளிச் சாலையில் இவர் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாகப் பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் அவரைக் கைது செய்து, செம்பியன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள 'சிங்கப்பெண்கள்' எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும், சென்னையில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Also Read
-
“உங்கள் அரசியல் பயணம் புரிந்துவிட்டது” : ராகவா லாரன்ஸிற்கு இயக்குநர் சேரன் கண்டனம்!
-
அதிர்ச்சியில் தமிழ்நாடு: ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய 5 கொடூரச் சம்பவங்கள்!
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!