Tamilnadu
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நியமித்து கழக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக கே.ஈஸ்வரசாமி திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் தெற்கு வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக ஏ.பி.நந்தகுமாரும், வேலூர் வடக்கு, காட்பாடி, கீழ்வைத்தியணாக்குப்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Also Read
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!