Tamilnadu
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நியமித்து கழக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக கே.ஈஸ்வரசாமி திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் தெற்கு வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக ஏ.பி.நந்தகுமாரும், வேலூர் வடக்கு, காட்பாடி, கீழ்வைத்தியணாக்குப்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!