Tamilnadu
”அ.தி.மு.கவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார்” : திண்டுக்கல் சீனிவாசன் உளறல் பேச்சு!
உளறல்களுக்கு பேர் போனவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். 'இயேசு நாதரை சுட்ட கோட்சே', 'திருக்குறளை எழுதியது அவ்வையார்' என வாய்க்கு வந்தபடி உளறி கொட்டியவர் திண்டுக்கல் சீனிவாசன்.
இவரது உளறல் பேச்சு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது, ”அ.தி.மு.கவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார்” என உளறி இருக்கிறார்.
திண்டுக்கல் நகரத்தில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது,அ.தி.மு.கவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார் என கூறினார். இதைகேட்ட அங்கிருந்த தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்னதான் பேசுகிறார் என கொஞ்ச நேரம் தொண்டர்கள் திகைத்து விட்டனர். பின்னர் தான் திண்டுக்கல் சீனிவாசன் உளறுகிறார் என்பதை தொண்டர்கள் புரிந்துகொண்டனர்.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!