Tamilnadu
கோவை மற்றும் மதுரையில் IIT கல்லூரிகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் கோரிக்கை!
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் இயற்கை வனப்பகுதி குறைந்து வருவது குறித்தும் அதை சரிசெய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வனப்பகுதி பாதுகாப்பிற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு செய்யப்பட்ட நிதி எவ்வளவு?
சிறுத்தை மற்றும் புலிகள் வாழ்விடங்கள் பற்றிய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றிற்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் பற்றிய விவரங்கள் என்ன?
வனப்பகுதி மற்றும் புலிகள் பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டுள்ளதா? தமிழ்நாட்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) புதிய புலிகள் காப்பகங்களை உருவாக்க வைத்துள்ள திட்டம் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
கோவை மற்றும் மதுரையில் ஐஐடி கல்லூரிகள்
சென்னைக்கு அடுத்து கோவை மற்றும் மதுரையில் புதிய ஐஐடிகள் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சகத்திடம் திமுகவின் மக்களவை உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒருவேளை ஒன்றிய அரசுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லையென்றால் அதற்குரிய காரணத்தையும் கேட்டுள்ளனர். முறைசார் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் – நடவடிக்கை என்ன?
Also Read
-
கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!
-
மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!
-
சேத்துமடை முகாம் திறப்பு : Trekking உடன் எழில் கொஞ்சும் இயற்கையை ரசிக்க வேண்டுமா?.. விவரம் உள்ளே!
-
அரசு மருத்துவமனையில் புதிதாக 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடம்: திறந்து வைத்த துணை முதல்வர்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!