Tamilnadu
”முதுகெலும்புள்ள களப்போராளி மு.க.ஸ்டாலின்” : நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ், "சூரிய மகள் கையில் புத்தகம் வைத்திருப்பது போன்ற சிலை உள்ளது. "பெண் விடுதலை வேண்டுமென்றால் கையிலுள்ள கரண்டியினை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள்" என்றார் பெரியார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எழும்புகளால் ஆனது அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதையத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியால் ஆனது.
அறநிலையத்துறை அமைச்சராக அல்ல அரணாக இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால் தான் ஆன்மீகத்தை சொல்லி ஆட்டையை போட நினைப்பவர்கள் இவரை பார்த்து பயப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!