Tamilnadu
“8 ஆண்டுகளில் 12 ஆயிரம் சுயமரியாதை திருமணங்கள்!” : சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் பதிவு குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும், பதிவுத்துறை பயிற்சி நிலையம் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. திருமணப் பதிவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், பதிவுத் துறையின் இணையதளத்திலேயே செய்து கொள்ளும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.”
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!