Tamilnadu
”நகராட்சியுடன் இணையும் 375 ஊராட்சிக்கள்” : சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைப்பது குறித்து உறுப்பினர் மாரிமுத்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு,"இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும் .
திருத்துறைப்பூண்டி பேரூராட்சியின் கூடுதல் தேவையை ஆராய்ந்து உடனடியாக குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கோள்ளப்படும். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் புதிய திட்டத்தினை உருவாக்கி அதன் மூலமாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருத்துறைப்பூண்டி இரண்டாம் நிலை நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த எல்லா தகுதியும் இருந்தால் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!