Tamilnadu
”சுங்கச் சாவடிகளை மூட வேண்டும்” : நாடாளுமன்றத்தில் தி.மு.க MP வலியுறுத்தல்!
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் கீழ் தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களின் விவரங்கள், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அத்திட்டங்கள் நிறைவுபெற எதிர்பார்க்கப்படும் காலக்கெடு போன்ற விவரங்களை அறிவிக்க வேண்டும் என தி.மு.க எம்.பி பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
சென்னை முதல் பெங்களூரு வரையிலான விரைவுச் சாலை திட்டம் நிறைவுறுவதில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு அதை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஒரு முறை ஒரு சுங்கக் கட்டணம் எனும் அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதால் பயணிகளுக்கு போக்குவரத்து சிரமங்கள் குறையும். அதற்கான சாத்தியங்களை ஆராய வேண்டும்.
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வசூல் செய்யப்பட்ட தொகை பற்றிய வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். ஏற்கனவே மூதலீடு செய்த தொகையை சுங்கக் கட்டணங்கள் மற்றும் NHAI மூலம் பெறப்பட்ட சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பி.வில்சன் MP வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !