Tamilnadu
”இடர்மிகு நேரத்தில் மக்களுடன் நிற்க வேண்டும்” : அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி!
ஃபெஞ்சல் புயல் டிசம்பர் 1 ஆம் தேதி கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த மூன்று நாட்களாக தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இன்று கடலூர் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பிடத் தேவையான அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, மழைநீர் தேங்குவதால் பரவுகிற தொற்றுநோயிலிருந்து மக்களை காக்கின்ற வண்ணம், தொடர் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், வெள்ள பாதிப்புக்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ள நிலையில், வீடு - வேளாண் நிலங்கள் - கால்நடைகள் என பாதிப்பின் நிலவரத்தை உடனுக்குடன் கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். இந்த இடர்மிகு நேரத்தில் நம் திராவிட மாடல் அரசு மக்களுடன் மக்களாக நிற்கும் என்கிற வகையில் செயலாற்றிட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!