Tamilnadu
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவ.13 ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவ.20 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது.
இதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில் இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.
அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!
-
மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!
-
சேத்துமடை முகாம் திறப்பு : Trekking உடன் எழில் கொஞ்சும் இயற்கையை ரசிக்க வேண்டுமா?.. விவரம் உள்ளே!
-
அரசு மருத்துவமனையில் புதிதாக 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடம்: திறந்து வைத்த துணை முதல்வர்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!