Tamilnadu
கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் : முன்னாள் பேரா.நிர்மலா தேவிக்கு சிறை தண்டனை அறிவிப்பு - விவரம் என்ன?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கணித பேராசிரியாராக பணிபுரிந்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு (அதிமுக ஆட்சியில்) அதே கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளை தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகளை பேசி அவர்களை தவறான பாதையில் வழிநடத்த முயன்றுள்ளார். அந்த மாணவிகளை அரசியல் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சூழலில் இவர், ஒரு மாணவியிடம் இதுகுறித்து பேசுவது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர் மீது 5 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, ஜாமீனும் பெற்று வெளியே வந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருக்காகத்தான் நிர்மலா தேவி இவ்வாறு செயல்பட்டதாகவும், வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவாகரம் அப்போது பூதாகரமான நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இதுக்குறித்து CBCID நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில் நிர்மலா தேவிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதோடு அவருக்கு துணையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் தற்போது குற்றவாளி நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!