Tamilnadu
சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து : பா.ஜ.க நிர்வாகி அதிரடி கைது!
பா.ஜ.கவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சௌதாமணி. இவர் தனது சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் நடக்காத ஒன்றை நடந்ததுபோலவும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், பள்ளி சீருடையில் மாணவிகள் சிலர் மரு அருத்துவரது போன்ற வீடியோவை வெளியிட்டு, வேண்டும் என்றே தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.
இதையடுத்து, வேண்டும் என்றே தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்டு பா.ஜ.க நிர்வாகி சௌதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்ஏ.கே.அருண் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சென்னையில் இருந்த செளவதா மணியை கைது செய்தனர்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!