இந்தியா

புதுச்சேரி சிறுமி வன்கொடுமை, கொலை விவகாரம் : கஞ்சா போதை குற்றவாளிகள் சிக்கியது எப்படி ?

புதுச்சேரி சிறுமி வன்கொடுமை, கொலை விவகாரம் : கஞ்சா போதை குற்றவாளிகள் சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் வசிக்கும் தம்பதி ஒருவருக்கு 2-வதாக 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அந்த பகுதியில் 5-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 2-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி அழைந்தனர். அப்போது சிறுமி கிடைக்கவில்லை என்பதால், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். எனினும் தகவல் இல்லை என்பதால் சிறுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்தே பல்வேறு பகுதிகள், பலரது வீடுகள், சந்தேகத்திற்குரிய வகையில் இருக்கும் நபர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

புதுச்சேரி சிறுமி வன்கொடுமை, கொலை விவகாரம் : கஞ்சா போதை குற்றவாளிகள் சிக்கியது எப்படி ?

தொடர்ந்து தேடி வந்த நிலையில், நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சந்தேகத்திற்குரிய வகையில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், அதனை பிரித்து பார்க்கையில் காணாமல் போன சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தது.

இதையடுத்து உடலை மீட்ட அதிகாரிகள் உடனே உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர்களின் போராட்டதையடுத்து விசாரணையை தீவிரமாக நடத்தியதில் முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

புதுச்சேரி சிறுமி வன்கொடுமை, கொலை விவகாரம் : கஞ்சா போதை குற்றவாளிகள் சிக்கியது எப்படி ?

அதாவது கடந்த 2-ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை விவேகானந்தன் வீட்டுக்கு கஞ்சா போதையில் இருந்த கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் வெளியே இருந்து வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதில் சிறுமி மூச்சுத்திணறி மயங்கவே சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அவரது உடலை மறைக்க எண்ணியுள்ளனர். அதன்படி இருவரும் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் கை, கால்களை வேட்டித்துணியால் கட்டி கால்வாயில் வீசியுள்ளனர்.

இவையனைத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தற்போதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினரால் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கஞ்சா போதையில் சிறுமியை வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    banner

    Related Stories

    Related Stories