Tamilnadu
நாளை மறுநாள் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு - என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ. 37,907.19 கோடி கோரியுள்ளது.
மேலும் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். மேலும் ன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாட்டிற்கு வந்து, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதேபோல் தென்மாவட்டங்களில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இப்படி அடுத்தடுத்து ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்துவிட்டு சென்ற பிறகு கூட தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணை நிதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டு அனைத்துக்கட்சி குழுவினர் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனடியாக வழங்கிட வலியுறுத்த இருக்கிறார்கள்.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!