Tamilnadu
”இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது” : ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதோடு தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குள்ளும் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார்.
இதுமட்டுமல்லாது ஒரு ஆளுநருக்கான வேலையைத் தவிர பா.ஜ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் வேலையைத்தான் செய்கிறார் என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தனது சனாதன கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை என மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது. சமத்துவம், அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்பதும் இங்குதான் உள்ளது. சமூக நீதிக்கான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த சமத்துவ கொள்கையையும், திராவிட மாடல் ஆட்சியையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!