Tamilnadu
”இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது” : ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதோடு தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குள்ளும் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார்.
இதுமட்டுமல்லாது ஒரு ஆளுநருக்கான வேலையைத் தவிர பா.ஜ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் வேலையைத்தான் செய்கிறார் என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தனது சனாதன கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை என மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது. சமத்துவம், அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்பதும் இங்குதான் உள்ளது. சமூக நீதிக்கான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த சமத்துவ கொள்கையையும், திராவிட மாடல் ஆட்சியையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
-
"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?
-
“ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !
-
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : உடந்தையாக இருந்த சக மாணவன் : 5 சிறுவர்களின் செயலால் அதிர்ச்சி !