Tamilnadu
“தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..” - அமைச்சர் நாசர் பேட்டி !
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் குறைவான அளவு விநியோகம் செய்வதாக வந்த புகார்களை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பால் விநியோகம் குறைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்கப்பட்டது. ஏன் குறைவான அளவில் பால் கிடைப்பது குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பால் விநியோகத்தில் மக்களுக்கு எந்த ஒரு குறைபாடும் இல்லாத வகையில் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளகளை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தக் காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.
ஒரு சில இடங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் விநியோகம் காலதாமதம் ஏற்பட்டது. அதுவும் சரிசெய்யப்பட்டது. மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் விநியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல். நாளை முதல் முறையாக ஆவின் பால் விநியோகம் நடைபெறும். கோடைகாலம் வரவுள்ளதால் ஆவினில் கூடுதலான விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்பட உள்ளன.
பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. லாபம் மட்டும் நோக்கம் அல்ல. பால் விநியோகத்தில் எந்தவிதமான சமரசம் செய்யாமல் முறையாக பொது மக்களுக்கு பால் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது." என்று தெரிவித்தார்.
Also Read
-
நகர மக்களுக்காக 16 உழவர் அங்காடிகள்; 672 வேளாண் இயந்திரங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.5,980 கோடி முதலீட்டில் 8,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
-
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது : M.N.ராஜம், S.P.முத்துராமன் ஆகியோருக்கு வழங்கினார் CM MK Stalin!
-
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஏழை பெண்களுக்கு எதிரானதாகும்” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
மும்பையில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: நீதி கேட்கும் பெற்றோர் - நடந்தது என்ன?