Tamilnadu
தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா விற்பனை - இந்து முன்னணி நிர்வாகி உட்பட 2 பேர் கைது : போலிஸ் அதிரடி!
சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று அம்மாபேட்டை காவல் நிலைய போலிஸார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தபோது, கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்யும் ஸ்ரீதர் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 9 கிலோ அளவில் இருந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை, இந்து முன்னணியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிகரெட் வியாபாரி ஸ்ரீதர் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையில் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!