Tamilnadu
இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்.. விழுப்புரத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இளைஞரான அவர் கடந்த 7ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து அவரது மூளை செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலைத் தானமாக வழங்கினால் சிலருக்கு மறுவாழ்க்கை அளிக்க முடியும் என கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தோஷின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், நுரையீரல், 2 கருவிழிகள் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டு சென்னை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு 8 பேருக்கு அவரின் உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்க்கை கிடைத்துள்ளது. மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!