Tamilnadu
காதலிப்பதாக மாணவியை ஏமாற்றிய இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகர பட்டினத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் சுமதி. இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் . தனது உறவினரான திசையன் விளையைச் சேர்ந்த துரை மகன் வேம்பு ராஜா.
இவர் தனது உறவினரான சுமதியை அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது. இதனால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையடுத்து வேம்பு ராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுக்குத் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த சுமதி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வேம்பு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி இளைஞர் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!