Tamilnadu
காதலிப்பதாக மாணவியை ஏமாற்றிய இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகர பட்டினத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் சுமதி. இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் . தனது உறவினரான திசையன் விளையைச் சேர்ந்த துரை மகன் வேம்பு ராஜா.
இவர் தனது உறவினரான சுமதியை அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது. இதனால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையடுத்து வேம்பு ராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுக்குத் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த சுமதி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வேம்பு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி இளைஞர் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!