Tamilnadu
“மகளிர் உதவித்தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன முக்கிய தகவல்!
தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனி அல்லிநகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின், நகராட்சி, பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் 5,000 பணியிடங்கள் 6 மாதங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும்.
சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு அனைவரும் வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் படி, கட்டாயம் நிதி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அ.தி.மு.க. தலைமை இல்லாத கட்சி. அந்தக் கட்சி இனி காணாமல் போய்விடும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!