Tamilnadu
“மகளிர் உதவித்தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன முக்கிய தகவல்!
தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனி அல்லிநகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின், நகராட்சி, பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் 5,000 பணியிடங்கள் 6 மாதங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும்.
சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு அனைவரும் வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் படி, கட்டாயம் நிதி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அ.தி.மு.க. தலைமை இல்லாத கட்சி. அந்தக் கட்சி இனி காணாமல் போய்விடும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!