Tamilnadu
முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்கு விசிட் அடிக்கும் அமைச்சர் அன்பில்; திகைத்துப் போன மாணவர்கள்! (Album)
தமிழ்நாட்டில் பத்தாண்டு காலமாக அதிமுகவினரால் முடங்கிக் கிடந்த துறைகள் அனைத்துக்கும் புத்துயிர் கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த நாள் முதலே துரிதமாக செயல்பட்டு வருகிறது.
அதற்கேற்றார்போல் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அனைத்து அமைச்சர்களும் செயல்வடிவம் கொடுத்து திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு அவர் சார்ந்த துறையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அதுபோக, தாமாக முன்வந்து களத்தில் இறங்கி பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறார்.
அதன்படி தான் செல்லும் இடங்களில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்த நிலையில், தஞ்சாவூர் மாட்டத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது பள்ளியை நல்லமுறையில் தரம் உயர்த்தவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அங்குள்ள பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் உரையாடினார். மேலும் குழந்தைகளின் கற்றல் திறனை அமைச்சரே நேரடியாக கேட்டறிந்தார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!