Tamilnadu
"என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவேன்": வீர் சக்ரா விருதுபெற்ற மறைந்த ராணுவ வீரர் பழனி மகனின் லட்சியம்!
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவரும் ஒருவர்.
இந்நிலையில் வீர தீரச் செயல் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவியிடம் வீர் சக்ரா விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்நிகழ்வு குறித்து ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி கூறுகையில், "ராணுவத்தில் சாதாரண சிப்பாயாகச் சேர்ந்தேன், நீ அதிகாரியாக ராணுவத்தில் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டும் என அடிக்கடி எனது கணவர் மகனிடம் கூறுவார்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது மகன் பிரசன்னா,"எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன். ராணுவத்தில் அதிகாரியாகப் பொறுப்பேற்பதே எனது லட்சியம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!