Tamilnadu
அடுத்தடுத்து 4 மாவட்டத்தில் செயின் பறிப்பு.. கொள்ளையனை காட்டிக் கொடுத்த ஒற்றை புகைப்படம் - நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கானங்கொல்லை கிராமத்தில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
இது குறித்து திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மர்ம நபரைத் தேடி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், பழைய குற்றவாளியின் புகைப்படத்தை ஒப்பிட்டுப்பார்த்த போது புதுச்சேரியைச் சேர்ந்த விஜி என்ற குற்றவாளிதான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை செய்து செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரே மாதத்தில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும், லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் இருசக்கர வாகனத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் விஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!