Tamilnadu
அடுத்தடுத்து 4 மாவட்டத்தில் செயின் பறிப்பு.. கொள்ளையனை காட்டிக் கொடுத்த ஒற்றை புகைப்படம் - நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கானங்கொல்லை கிராமத்தில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
இது குறித்து திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மர்ம நபரைத் தேடி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், பழைய குற்றவாளியின் புகைப்படத்தை ஒப்பிட்டுப்பார்த்த போது புதுச்சேரியைச் சேர்ந்த விஜி என்ற குற்றவாளிதான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை செய்து செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரே மாதத்தில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும், லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் இருசக்கர வாகனத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் விஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!