Tamilnadu
“கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்ற கணவர் சாலை விபத்தில் பலி” : திருவள்ளூரில் நடந்த சோகம்!
திருவள்ளூரை சேர்ந்தவர் கிரிதரன். வயது 36. இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், கிரிதரனின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் மனைவியை பார்ப்பதற்காக கிரிதரன் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மாம்பாக்கம் பகுதியில் பின்னால் வந்த டைலர் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது அதே லாரிதலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்பெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
மேலும் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் சாலைவிபத்தில் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!