Tamilnadu
“கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்ற கணவர் சாலை விபத்தில் பலி” : திருவள்ளூரில் நடந்த சோகம்!
திருவள்ளூரை சேர்ந்தவர் கிரிதரன். வயது 36. இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், கிரிதரனின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் மனைவியை பார்ப்பதற்காக கிரிதரன் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மாம்பாக்கம் பகுதியில் பின்னால் வந்த டைலர் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது அதே லாரிதலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்பெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
மேலும் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் சாலைவிபத்தில் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!