Tamilnadu
“பிரியாணி சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே மாமூல் கேட்டு மிரட்டல்” : கத்தியை காட்டி சவால் விட்ட ரவுடி கைது!
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா இவர் அதே பகுதியில் பிஸ்மில்லா என்ற பெயரில் பீப் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கடைக்கு வந்த இருவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் இதயத்துல்லா பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட போது கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காததால் கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர்.
மேலும் காவல்துறையால் கூட என்னை பிடிக்க முடியாது என சவால் விட்டுவிட்டு கொலை மிரட்டல் வித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இது குறித்து கடை உரிமையாளர் இதயதுல்லா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது சென்னை கொருக்குப்பேட்டை ஜெ. ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த நாய் பல்லு அப்பு (எ) டேனியலை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி தலைமறைவாக உள்ள. லாலூ (எ) சாகுல்ஹமீது போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”