Tamilnadu
"10 ஆண்டாக நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் அதிமுக அரசு 10 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும். மேலும் புதிய பேருந்துகளை வாங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!