தமிழ்நாடு

பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய முக்கிய தகவல்!

தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, தரமணியில் அமைந்துள்ள ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் "ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி" என்னும் திட்டத்தில் மாணவர்கள் கோரிக்கைக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் மேடையில் பேசியதாவது,

நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் நாட்டில் பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் இருந்து மக்களை அறிவியல் தொழில் நுட்பங்கள் காத்துள்ளது. நவீன அறிவியல் தொழில் வளர்ச்சியின் காரணமாகவே ஓராண்டுக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்தது. கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்க்கான திறனை இழந்துள்ளனர். இதனை நவீன தொழில் நுட்ப்பங்கள் மூலமாகவும் நேரலை வகுப்புகள் மூலமாகவும் மீளுருவாக்கம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடைப்பேச்சு

மாணவர்களிடம் இருக்கும் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அறிவுத்திறன் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நல்ல முடிவினை எடுப்பார் என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, சென்னை மாநகராட்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சுவாமிநாதன் அறிவியல் ஆராய்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதுவரை இந்நிறுவனத்தின் மூலம் 3,000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை பெற்று பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories