Tamilnadu
ட்ரையல் பார்ப்பதாகச் சென்றவரின் தில்லுமுல்லு.. நெல்லை அருகே துணிக்கடையில் நூதன திருட்டு - சிக்கிய இளைஞர்!
ஜவுளிக்கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் துணிகளை திருடி மாட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தாமரை மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமதன். இவர் திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றுள்ளார்.
ட்ரையல் ரூமுக்குச் சென்ற செல்வமதன் ஒவ்வொரு துணியாக மாற்றிப் பார்த்துள்ளார். பனியன், டீசர்ட்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அணிந்து கொண்டதோடு அவர் அணிந்திருந்த லுங்கிக்குள்ளும் புதுத் துணிகளைச் சுருட்டி வைத்துள்ளார்.
துணி எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூமுக்குள் சென்று, துணி இல்லாமல் வெளியே வந்ததால் அவர் மீது சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து அவர் அணிந்திருந்த டீசர்ட்டை கழற்றுமாறு கூறி, திருடிய துணிகளையெல்லாம் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நூதன திருட்டு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!