Tamilnadu
ட்ரையல் பார்ப்பதாகச் சென்றவரின் தில்லுமுல்லு.. நெல்லை அருகே துணிக்கடையில் நூதன திருட்டு - சிக்கிய இளைஞர்!
ஜவுளிக்கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் துணிகளை திருடி மாட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தாமரை மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமதன். இவர் திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றுள்ளார்.
ட்ரையல் ரூமுக்குச் சென்ற செல்வமதன் ஒவ்வொரு துணியாக மாற்றிப் பார்த்துள்ளார். பனியன், டீசர்ட்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அணிந்து கொண்டதோடு அவர் அணிந்திருந்த லுங்கிக்குள்ளும் புதுத் துணிகளைச் சுருட்டி வைத்துள்ளார்.
துணி எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூமுக்குள் சென்று, துணி இல்லாமல் வெளியே வந்ததால் அவர் மீது சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து அவர் அணிந்திருந்த டீசர்ட்டை கழற்றுமாறு கூறி, திருடிய துணிகளையெல்லாம் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நூதன திருட்டு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!