Tamilnadu
நாளை தேர்தல்... தோல்வி பயத்தால் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி செய்த எடப்பாடி அரசு!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அரசியல் கட்சிகளில் பரப்புரைகள் நேற்று இரவு 7 மணியோடு நிறைவு பெற்றது.
தமிழகத்தில் 6,28,69, 955 பேர் வாக்களிப்பதற்காக 88, 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலையே வாக்குப் பதிவு துவங்குவதால்,இதற்கான ஏற்பாடு பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு தொகுதிகளில் பூத் சிலிப் விநியோகம் செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக தேர்தலின் போது வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் விதமாக, அவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று அரசு அதிகாரிகள் பூத் சிலிப் வழங்குவார்கள்.
ஆனால், நாளை நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதில் குளறுபடி நடந்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசு ஊழியர்கள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் விநியோகிக்கப்படவில்லை. ஒரு வீட்டில் நான்கு வாக்காளர்கள் இருந்தால், ஒருவருக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், பூத் சிலிப் அச்சிட்டு முறையாக வந்து சேராததாலே, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!