Tamilnadu
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!
காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கையில், வடகிழக்கு வங்கக் கடலில் வருகிற 20ஆம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதனால் காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் வருகிற 21ஆம் தேதி வரை அந்தமான், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!