Tamilnadu
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!
காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கையில், வடகிழக்கு வங்கக் கடலில் வருகிற 20ஆம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதனால் காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் வருகிற 21ஆம் தேதி வரை அந்தமான், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
-
“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!