Tamilnadu
கிசான் திட்ட மோசடியில் ஆளுங்கட்சிக்கும் பங்கு? வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொன்முடி வலியுறுத்தல்!
கிசான் திட்ட மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை ஏன் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “மத்திய அரசின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக இருந்தாலும் அதில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருக்கிறது. கிசான் திட்டத்தை மாநிலத்தின் வேளான் ஒருங்கிணைப்பாளர், நொடல் அதிகாரிகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இந்த கிசான் முறைகேடு குறித்து முதல்வரே கூறி இருக்கிறார். 5 லட்சம் போலி விவசாயிகள் என்றும், 110 கோடி ரூபாய் இதில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வர் மட்டுமல்மால் வேளாண் துறை செயலாளரும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கெல்லாம் யார் காரணம் ? இதில் ஒப்பந்த ஊழியர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு எந்தப் பகுதியிலும் இதுபோல நடைபெறவில்லை என மத்திய வேளாண் துறை தெரிவித்திருக்கிறது.
சி.பி.சி.ஐ.டி போலிஸாரோ முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமல் 12 ஒப்பந்த ஊழியர்களை கைது செய்துள்ளது. இதில் ஆளுங்கட்சி ஆதரவு இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போல இந்த கிசான் திட்ட முறைகேட்டு விவகாரத்தை சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !