Tamilnadu
“சிறுமி பாலியல் வன்கொடுமை” - அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் தாய் காவல் நிலத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து புகாரை ஏற்று 15 வயது சிறுமியைத் தேடிவந்த போலிஸார் தன் காதலனுடன் இருந்த சிறுமியை மீட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணையைத் தொடங்கினர்.
போலிஸ் விசாரணையில் சிறுமியிடமிருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமி கூறுகையில், “என் தாய்க்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும் அவருடன் இருந்தவர்களும் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவந்தனர்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய், காதலன் உட்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். எனவே, போலிஸார் அவரை தேடிவந்த நிலையில் இன்று திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!