Tamilnadu
“சிறுமி பாலியல் வன்கொடுமை” - அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் தாய் காவல் நிலத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து புகாரை ஏற்று 15 வயது சிறுமியைத் தேடிவந்த போலிஸார் தன் காதலனுடன் இருந்த சிறுமியை மீட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணையைத் தொடங்கினர்.
போலிஸ் விசாரணையில் சிறுமியிடமிருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமி கூறுகையில், “என் தாய்க்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும் அவருடன் இருந்தவர்களும் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவந்தனர்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய், காதலன் உட்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். எனவே, போலிஸார் அவரை தேடிவந்த நிலையில் இன்று திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!