Tamilnadu
“வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு; 40 டிகிரிக்கு மேல் வெயிலும் கொளுத்தும்” : வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே இருக்கும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் குறிப்பாக கரூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஆக 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் காணப்படும். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 11 மணி முதல் 3.30 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.
சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மற்ற நேரங்களில் தெளிவாகவும் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகர்கோவில் ஏரணியல் ஏழு சென்டிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
Also Read
-
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
-
“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!