Tamilnadu
7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம் அறிவிப்பு - சென்னை நிலவரம் என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள வானிலை மையம் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 16 செ.மீ., நீலகிரி கோத்தகிரியில் 6 செ.மீ., காஞ்சிபுரம் மதுராந்தகம் மற்றும் நீலகிரி குன்னூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!