Tamilnadu
7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம் அறிவிப்பு - சென்னை நிலவரம் என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள வானிலை மையம் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 16 செ.மீ., நீலகிரி கோத்தகிரியில் 6 செ.மீ., காஞ்சிபுரம் மதுராந்தகம் மற்றும் நீலகிரி குன்னூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
-
வெறுப்பு பேச்சு - பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய Instagram!
-
”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!