Tamilnadu
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணமும் தபால் ஓட்டும் பறிமுதல்
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகம் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்தது.
ஆனால் சோதனை நடத்த அமமுக கட்சியினர் அனுமதிக்காமல் தடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர் நடந்த சோதனையில் 94 பண்டல்களில் இருந்து 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த பண்டல்களில் பாக எண், வாக்காளர் பெயர் போன்ற தகவல் எழுதப்பட்டிருந்திருக்கிறது. மேலும், அமமுக சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஓட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
வழிப்பறியில் ஈடுபடும் பாஜகவினர் : இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜக நிர்வாகிகள் கைது - வேலூர் போலீஸார் அதிரடி !
-
"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்" - சென்னை பெருநகர காவல் துறை!
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!