Tamilnadu
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணமும் தபால் ஓட்டும் பறிமுதல்
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகம் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்தது.
ஆனால் சோதனை நடத்த அமமுக கட்சியினர் அனுமதிக்காமல் தடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர் நடந்த சோதனையில் 94 பண்டல்களில் இருந்து 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த பண்டல்களில் பாக எண், வாக்காளர் பெயர் போன்ற தகவல் எழுதப்பட்டிருந்திருக்கிறது. மேலும், அமமுக சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஓட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!