Tamilnadu
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணமும் தபால் ஓட்டும் பறிமுதல்
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகம் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்தது.
ஆனால் சோதனை நடத்த அமமுக கட்சியினர் அனுமதிக்காமல் தடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர் நடந்த சோதனையில் 94 பண்டல்களில் இருந்து 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த பண்டல்களில் பாக எண், வாக்காளர் பெயர் போன்ற தகவல் எழுதப்பட்டிருந்திருக்கிறது. மேலும், அமமுக சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஓட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!