Politics
“காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் வேண்டும்...” - பொதுவெளியில் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !
பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும், பாஜக கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களிலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், துப்பாக்கி கலாசாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அண்மையில் கூட மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியின் நிர்வாகியை, அதன் கூட்டணி கட்சியான பாஜக நிர்வாகி பொதுவெளியில் சுட்டுக்கொலை செய்தார்.
கர்நாடகாவில் கூட பாஜக மக்கள் மத்தியில் வன்மத்தை விதைத்தது. அதன் எதிரொலியாக கர்நாடகத்தில் பாஜக வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எனினும் பாஜக தொடர்ந்து மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையே பரப்பி வருகிறது. மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நிலையில், பாஜகவினர் ஆயுதத்தை ஏந்துமாறு பிரசாரம் செய்கின்றனர்.
இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரத்தை மேற்கொள்ளும் பாஜக, தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார். தற்போது இவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. நேற்று கர்நாடகா பாஜக புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் துரோகிகள். காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க நினைக்கிறது. குறிப்பாக கர்நாடகா காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ் மற்றும் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி ஆகியோர் தேசத் துரோகிகள் என பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூற வேண்டும். தேசத்துரோகிகளை சுட்டு கொலை செய்ய சட்டம் இயற்றவேண்டும்.” என்று பேசினார்.
பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவின் பிரபல சமூக ஆர்வலர் கவிதா ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், “பொதுவெளியில் கே.எஸ். ஈஸ்வரப்பாவை அடித்துக் கொல்ல வேண்டும் என்று நான் கூறியிருந்தால், பெங்களூரு காவல்துறை என்னைக் கைதுசெய்திருக்கும்.
ஆனால் டி.கே.சுரேஷ், வினய் குல்கர்னி ஆகியோர் கொல்லப்பட வேண்டும் எனப் பேசிய ஈஸ்வரப்பாமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. சட்டம் உண்மையில் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது" என காட்டமாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வு கர்நாடக அரசியலில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!