Politics
தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகும் நவீன் பட்நாயக் !
ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பிஜு ஜனதா தளம் 104 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
ஆட்சியமைக்க 74 இடங்கள் இருந்தால் போதுமானது என்ற நிலையில் பிஜு ஜனதா தளம் 104 இடங்களில் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து 5வது முறையாக ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். அதேபோல் மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 14-ல் பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது.
1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார் நவீன் பட்நாயக். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் 2000ம் ஆண்டு ஒடிசாவின் முதல்வரானார்.
2000ம் ஆண்டு முதல் நடைபெற்ற நான்கு சட்டசபை தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்து வந்தது. தற்போதைய தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!