India
ED,CBI விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும் : இந்தியா கூட்டணிக்கு அகிலேஷ் சொல்லும் ஆலோசனை என்ன?
உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட வாக்கப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்னும் ஜூன் 1 ஆம் தேதி 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 4 ஆம் தேதி7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.
இம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி என மும்முனைபோட்டி நிலவுகிறது. இருப்பினும் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் ED,CBI விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அகிலேஷ், ” நிதி மோசடிகளை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. பின்னர் எதற்கு CBI?. அனைத்து மாநிலங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் பா.ஜ.க எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக மட்டுமே ED,CBI விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது.தேர்தல் பத்திரங்கள் மூலும் மிகப்பெரிய ஊழலை பா.ஜ.க செய்துள்ளது. ED,CBI விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க கட்சிக்கு நன்கொடை பெற்றுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது என்ன தவறு நடந்தது?. இது குறித்து ஏன் ED,CBI விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. அப்போது பலர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார்கள். இவற்றை எல்லாம் பார்த்தால் ED,CBI விசாரணை அமைப்புகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இந்த விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும். இதை இந்தியா கூட்டணிக்கு முன்மொழிகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!