India
ED,CBI விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும் : இந்தியா கூட்டணிக்கு அகிலேஷ் சொல்லும் ஆலோசனை என்ன?
உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட வாக்கப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்னும் ஜூன் 1 ஆம் தேதி 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 4 ஆம் தேதி7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.
இம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி என மும்முனைபோட்டி நிலவுகிறது. இருப்பினும் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் ED,CBI விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அகிலேஷ், ” நிதி மோசடிகளை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. பின்னர் எதற்கு CBI?. அனைத்து மாநிலங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் பா.ஜ.க எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக மட்டுமே ED,CBI விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது.தேர்தல் பத்திரங்கள் மூலும் மிகப்பெரிய ஊழலை பா.ஜ.க செய்துள்ளது. ED,CBI விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க கட்சிக்கு நன்கொடை பெற்றுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது என்ன தவறு நடந்தது?. இது குறித்து ஏன் ED,CBI விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. அப்போது பலர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார்கள். இவற்றை எல்லாம் பார்த்தால் ED,CBI விசாரணை அமைப்புகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இந்த விசாரணை அமைப்புகளை இழுத்து மூட வேண்டும். இதை இந்தியா கூட்டணிக்கு முன்மொழிகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!