India
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் பிரிஜ்வல் ரேவண்ணா. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கூட.
இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.கவும் இணைந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறார்கள். இங்கு ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். கடும் எதிர்ப்புகள் எழுந்து வருவதை அடுத்து, "பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க மகளிருக்கு ஆதரவாக இருக்கும் என்று அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். தற்போது மக்களவை தேர்தல் நேரம் என்பதால் இப்படியான ஒரு கருத்தை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியிலிருந்து ரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!