India
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஏப்.26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாக்பாசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
அப்போது அங்கு வந்த வடக்கு திரிபுரா பா.ஜ.க மாவட்ட தலைவர் காஜல் தாஸ், வாக்குச்சாவடியில் இருந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தேர்தல் அதிகாரியை காஜல் தாஸ் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பா.ஜ.க தலைவர் காஜல் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!