India
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஏப்.26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாக்பாசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
அப்போது அங்கு வந்த வடக்கு திரிபுரா பா.ஜ.க மாவட்ட தலைவர் காஜல் தாஸ், வாக்குச்சாவடியில் இருந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தேர்தல் அதிகாரியை காஜல் தாஸ் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பா.ஜ.க தலைவர் காஜல் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!