India
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஏப்.26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாக்பாசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
அப்போது அங்கு வந்த வடக்கு திரிபுரா பா.ஜ.க மாவட்ட தலைவர் காஜல் தாஸ், வாக்குச்சாவடியில் இருந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தேர்தல் அதிகாரியை காஜல் தாஸ் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பா.ஜ.க தலைவர் காஜல் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!