India
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஏப்.26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாக்பாசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
அப்போது அங்கு வந்த வடக்கு திரிபுரா பா.ஜ.க மாவட்ட தலைவர் காஜல் தாஸ், வாக்குச்சாவடியில் இருந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தேர்தல் அதிகாரியை காஜல் தாஸ் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பா.ஜ.க தலைவர் காஜல் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!