India
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
உத்தர பிரதேச மாநிலம் கெரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு கட்டத்தில் அவரிடம் தனது காதலை கூறி திருமணத்துக்கு ஒப்புதல் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தனது மனதில் வைத்த அமன், அந்த பெண்ணை பழி வாங்க எண்ணியுள்ளார்.
அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்னர், சிறுமி தனியாக இருந்தபோது, அவரை திட்டமிட்டு கடத்தி தனது வீட்டில் கையை கட்டி அடைத்து வைத்துள்ளார். அங்கே வைத்து அவரை தொடர்ந்து 3 நாட்கள் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும் ஒரு சூடான கம்பியை கொண்டு அந்த பெண்ணின் முகத்தில் இந்த இளைஞரின் பெயரையும் எழுதியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பித்த சிறுமி, இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட அமன் ஹுசைனை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கையில் அமனுக்கு உடந்தையாக அவரது தாய் மற்றும் சகோதரி இருந்ததாக கூறப்படுகிறது. அமன் மீது போக்ஸோ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கடத்தி வன்கொடுமை செய்து, முகத்தில் சூடு வைத்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!