India
”தாலியின் முக்கியத்துவம் குறித்து நரேந்திர மோடிக்கு என்ன தெரியும்?” : பிரியங்கா காந்தி பதிலடி!
”காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பறித்து விடுவார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அண்மையில் பேசி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, "இந்த நாட்டில் என்ன பேச்சுக்கள் நடக்கின்றன?. இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பறித்து விடுவார்கள் என பிரதமர் பேசி இருக்கிறார். இந்த நாடு கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ளது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. யாருடைய தாலி (தங்கத்தை) பறித்தார்களா?
ஓராண்டுக்கு மேல் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த விவசாயிகளின் மனைவிகளின் தாலியைப் பற்றி மோடி யோசித்தாரா?. மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணின் தாலி பற்றி மோடி யோசித்தாரா? பெண்களை அச்சப்படுத்தி வாக்கு சேகரிக்க மோடி வெட்கப்பட வேண்டும்.
38 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தனது பாட்டியைப் பார்த்த பிறகும், சல்லடையாக்கப்பட்ட தனது தந்தையைப் பார்த்த பிறகும் ராகுல்காந்தி அதைச் சொல்லி வாக்குக் கேட்டதில்லை. ஆனால் மோடி ரூ.10 கோட் சூட் போட்டுக்கொண்டு நான் ஒரு ஏழைத்தாயின் மகன் ஒரு நீலிக்கண்ணீர் வடித்து வாக்குக் கேட்கிறார்.என் தாய் இந்த நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்தார். தாலியின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்று பேசி இருக்கமாட்டார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!