India
”ஆளுர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும்” : உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து!
ஒன்றிய பா.ஜ.க அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சி மாநில அரசுகளுக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் இம்மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்கள்.
அண்மையில் கூட தமிழ்நாட்டில் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகுதான் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஆளுநர்கள் தடையாக இருந்து வருகிறார்கள். நீதிமன்றம் வரை சென்று தங்களது உரிமைகளை நிலைநாட்டி வருகிறார்கள் மாநில அரசுகள்.
இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஐதராபாத் சட்டப் பல்கலைக்கழக கருத்தரங்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, " மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காததால் இப்போது எல்லாம் மாநில ஆளுநர்கள் வழக்கின் ஒரு புள்ளியாக இருக்கிறார்கள். அரசியலமைப்பின் கீழ் இது ஆரோக்கியமான போக்கு இல்லை. ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டால்தான் இப்படியான வழக்குகள் குறையும். அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆளுநர்கள் தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !