India
பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!
குஜராத் மாநில எல்லைக்கு உட்பட கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சென்றது. இதைக் கவனித்த கடலோர காவல்படை உடனே அந்த படகை பிடிக்க முயன்றனர். இதை அறிந்த அப்படகு அவர்களிடம் இருந்து சிக்காமல் தப்பிக்க முயன்றது.
இருந்தும் கடலோர காவல்படையினர் அப்படகை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அப்படகில் சோதனை செய்தபோது இதில் ரூ.480 கோடிக்குப் போதைப் பொருள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அதில் இருந்து 4 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் அரபிக்கடலில் இரண்டாவது பெரிய போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை இதுவாகும். பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3,300 கிலோ போதைப் பொருள் பிறமுதல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலமான குஜராத்தான் போதைப் பொருள் கடத்தலுக்கு முக்கிய இடமாக இருக்கும் நிலையில் ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதுபோன்று வேண்டும் என்ற பா.ஜ.கவினர் பொய் பேசி வருவது இந்த பறிமுதல் சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!