India
பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !
தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் தந்தை பெரியாரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 4 தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் என்ற பகுதியில் உள்ளது குராரா என்ற கிராமம். இங்கு கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் கொண்டாடினர். அப்போது பெரியாரின் கருத்துகள், சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் பெரியாரால் ஏற்பட்ட நலத்தை எடுத்து கூறி வந்தனர்.
இதனால் ஆவேசப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவ்தேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!