India
பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !
தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் தந்தை பெரியாரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 4 தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் என்ற பகுதியில் உள்ளது குராரா என்ற கிராமம். இங்கு கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் கொண்டாடினர். அப்போது பெரியாரின் கருத்துகள், சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் பெரியாரால் ஏற்பட்ட நலத்தை எடுத்து கூறி வந்தனர்.
இதனால் ஆவேசப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவ்தேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
-
“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!