India
பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !
தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் தந்தை பெரியாரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 4 தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் என்ற பகுதியில் உள்ளது குராரா என்ற கிராமம். இங்கு கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் கொண்டாடினர். அப்போது பெரியாரின் கருத்துகள், சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் பெரியாரால் ஏற்பட்ட நலத்தை எடுத்து கூறி வந்தனர்.
இதனால் ஆவேசப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவ்தேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !