India
தாறுமாறாக சென்ற கார்.. 5 வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்: புதுச்சேரியில் நடந்தது என்ன?
புதுச்சேரி கீரப்பாளையம் பகுதியில் தாறுமாறாக வந்த கருப்பு நிற கார் ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி வாலிபர்கள் உடனே காரை விரட்டிச் சென்றனர். அப்போது எதிரே வந்த ஐந்து இருசக்கர வாகனங்களை இடித்து கொண்டு கார் வேகமாக சென்றது. இதில் ஒரு இருசக்கர வாகனம் காரின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையம் அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பின்னர் காரை விரட்டி வந்த பொதுமக்கள் காரில் இருந்த ஐந்து வாலிபர்களையும் பிடித்து வெளியே இழுத்து தர்ம அடிகொடுத்தனர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து ஐந்து பேரையும் மீட்ட அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சென்னையை சேர்ந்த சுனில், ஸ்ரீநாத், ஆஷிக் திலீப், எபிநேசர் ஆகிய 5 நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து நன்றாக மது குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். மது குடித்துவிட்டே காரை வேகமாக ஒட்டிச்சென்றதால் இந்த விபத்து நடந்தது தெரிந்தது. இதையடுத்து போலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நிவேதாவின் முயற்சிகளுக்கு அரசு உடன் நிற்கும்” : திருநங்கை மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்!
-
இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!
-
மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட விவசாயிகள்... மோடி கையாண்ட உத்தி என்ன?
-
மிரட்டலா? அல்லது பதவி ஆசையா? : பா.ஜ.க.விற்கு இழுக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!
-
“ஸ்மிருதி இராணிக்கு வாக்களிக்கக்கூடாது...” - அமேதியில் கூட்டாக சேர்ந்து உறுதி மொழி எடுத்த சமூகத்தினர் !