India
தாறுமாறாக சென்ற கார்.. 5 வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்: புதுச்சேரியில் நடந்தது என்ன?
புதுச்சேரி கீரப்பாளையம் பகுதியில் தாறுமாறாக வந்த கருப்பு நிற கார் ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி வாலிபர்கள் உடனே காரை விரட்டிச் சென்றனர். அப்போது எதிரே வந்த ஐந்து இருசக்கர வாகனங்களை இடித்து கொண்டு கார் வேகமாக சென்றது. இதில் ஒரு இருசக்கர வாகனம் காரின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையம் அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பின்னர் காரை விரட்டி வந்த பொதுமக்கள் காரில் இருந்த ஐந்து வாலிபர்களையும் பிடித்து வெளியே இழுத்து தர்ம அடிகொடுத்தனர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து ஐந்து பேரையும் மீட்ட அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சென்னையை சேர்ந்த சுனில், ஸ்ரீநாத், ஆஷிக் திலீப், எபிநேசர் ஆகிய 5 நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து நன்றாக மது குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். மது குடித்துவிட்டே காரை வேகமாக ஒட்டிச்சென்றதால் இந்த விபத்து நடந்தது தெரிந்தது. இதையடுத்து போலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!