India
பீகார் :சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. தவறை மறைக்க செய்த கொடுஞ்செயலால் அதிர்ச்சி !
பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்று பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த பிற சிறுமிகளை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளார். மேலும், இந்த சிறுமியிடம் பேசி அவரை மட்டும் யாரும் இல்லாத இடத்துக்கு தனியே அழைத்துசென்றுள்ளார்.
அங்கு சென்றவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், அதனை தடுக்க அங்கிருந்த களிமண் மற்றும் சேற்றை கொண்டு சிறுமியின் பிறப்புறுப்பில் தடவி ரத்தம் வழிவதை தடுத்துள்ளார்.
நெருநேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராத நிலையில், சிறுமியின் பெற்றோர் சிறுமியுடன் விளையாடியவர்களிடம் விசாரித்தபோது ஒரு இளைஞர் அந்த சிறுமியை தனியே அழைத்துச்சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கூறிய இடத்துக்கு அக்கம் பக்கத்தாருடன் சிறுமியின் உறவினர்கள் சென்றபோது அங்கு சிறுமியும் அந்த இளைஞரும் இருப்பது தெரியவந்தது.
அதோடு அந்த இளைஞர் சிறுமிக்கு செய்துவந்த கொடுமையும் அறிந்த அவர்கள் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!
-
“விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் த.வெ.க!” : தி.மு.க கண்டனம்!
-
ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!