India
நாய் குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த டெலிவரி BOY.. வைரலான வீடியோ.. மும்பையில் அதிர்ச்சி !
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அதே மகாராஷ்டிராவின் மும்பையில் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஹிரா பென்னா மாலில் உள்ள ரெஸ்டாரன்ட் ஊழியர்கள் பிறந்து 6 மாதங்களேயான நாய்க் குட்டி ஒன்றை வளர்ந்து வந்தனர். அந்த ரெஸ்டாரன்ட்க்கு உணவு வாங்க டெலிவரி செய்யும் ஆகாஷ் (வயது 25) என்ற இளைஞர் அடிக்கடி வந்துள்ளார்.
அப்படி வந்தவர் அந்த நாய் குட்டியை எடுத்து மாலின் பால்கனி பகுதிக்கு கொண்டுசென்ற ஆகாஷ் அங்கு வைத்து அந்த நாய் குட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர செயலை பார்த்த மற்றோர் டெலிவரி ஊழியர் அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்த வீடியோ மினு சேத் என்ற சமூக ஆர்வலர்களுக்கு வந்துள்ளார். அவர் அதனை பார்த்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அடிக்கடி அவர் உணவளிக்கும் நாய் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக காவல்நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். அதன் படி வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!