India
போன் மூலம் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மகனால் சிக்கிய தந்தை.. பஞ்சாபில் பரபரப்பு !
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் டி.ஏ.வி பப்ளிக் என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் வெடிகுண்டு மிரட்டலும், பள்ளி தலைமை ஆசிரியருக்கு துப்பாக்கி சூடு மிரட்டலும் வந்தது. இதையடுத்து இது குறித்து பள்ளி நிர்வாகம் காவல் துறையில் புகாரளிக்க, அவர்கள் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பள்ளியில் இரவு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது பள்ளியில் எந்த வெடிகுண்டும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் அந்த மிரட்டலை விடுத்தது அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
மீண்டும் அந்த பள்ளியை தொலைபேசி வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் கணித தேர்வை செய்வதற்காக மாணவன் ஒருவன் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவன் தனது தந்தையின் மொபைல் போனில் இருந்து மிரட்டல் விடுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
-
“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!