India
டெல்லியில் அரை நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு.. போலிஸ் தீவிர விசாரணை!
டெல்லி அடுத்த குருகிராமில் உள்ள நாதுபூர் பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது குறித்துதெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இறந்த இளம் பெண் யார் என்பது குறித்த விவரங்களை அரிய அவரின் படங்களை போலிஸார் மற்ற காவல்நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். டெல்லியில் அரை நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !